செவ்வாய் கிரகத்தில் பாடம் படிக்கலாம்....!!!!

Leave a Comment


நாம் நமது இழுப்பிடமாய் கொண்டுள்ள பிரபஞ்சத்தில் இருந்து பல வித மின் காந்த சமிக்ஞைகளை பெற்றுக் கொண்டே வந்திருக்கின்றோம். அகன்ற வெளியில் வெற்றிடத்தில் அலைந்து கொண்டிருக்கும் அலைகளை பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல இடங்களில் இரகசியமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இது மனித அத்தியாயத்தில் புதிய உறவுகளுக்கான பாலமாக அமையலாம், மனித வர்க்கத்தின் அழிவிற்கும் இட்டுச் செல்லலாம்.

உலகின் மக்கள் தொகை எழுநூறு கோடியைத் தாண்டி பெருக்கு விகிதத்தில் அதிகரித்து வருவது உலகளாவிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.மக்கள் தொகை பெருக்கம் எந்தவொரு நாட்டுத் தலைவர்களுக்கும் பிரஜைகளுக்கும் கவலை தரக்கூடிய ஒன்றாகவே இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருந்து வருகிறது. நேரடியாக தெரியாவிட்டாலும் மறைமுகமாக ஒவ்வொருவரும் அதை உணர்கின்றனர்.

சமுதாய பேதம் பிரித்து வாழ நிந்திக்கும் இவ்வுலகில் அடிமட்ட மக்களுக்கு அடிப்படை தேவைகளை பெறுவதே குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் நிலையும் அதுவாகவே இருக்கப் போகிறது.

நவீன மருத்துவ நுட்பங்களால் மனித இறப்பு விகிதம் குறைந்து விட்டது. இது ஒரு விதத்தில் கவலைக்குரியதானதே.பிறப்பு இறப்பு வீதங்களை சமநிலையில் வைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நாம் இந்நிலை தொடர்ந்தால் தரையில் கால் வைப்பதற்குக் கூட இடம் மிஞ்சியிருக்காது.

பூமியை ஒத்த வாழ்விடங்களை தேடுவதற்கான பணியை பல உலக வல்லரசுகள் அன்றே தொடங்கிவிட்டன. இன்று பொருளாதார வளர்ச்சியில் போட்டியிடும் இருநாடுகளும் அதில் புதிதாக இணைந்துள்ளன. முக்கியமாக அவ்விரு நாடுகளுக்குத் தான் இம்முயற்சி அவசியம்

ஆய்வுகளின் படி இன்னும் சில காலங்களில் பூமி வாழ்வதற்கு தகுதியற்றதாகி விடும். அப்பொழுது புதிய வாழ்விடத்திற்கான தேடல் அத்யாவசியமாகி விடும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலே அமெரிக்கா வாயேஜர் I & II என்ற விண்கலங்களை அந்தப் பணிக்காக விண்ணில் ஏவின. பூமியை போன்ற அமைப்பு கொண்ட கிரகங்கள் உள்ளதா மனிதன் அவற்றில் வாழ்வதற்கான வாழ்வாதாரங்கள் நிரம்பப் பெற்றுள்ளதா என ஆராய்வதே அதன் நோக்கம்.

இந்த நொடி வரை மனிதன் தன் இருப்பிடத்திற்கு மாற்றாக தேர்வு செய்திருப்பது செவ்வாய் கிரகத்தை தான். பூமியைப் போன்றே மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் நில அமைப்புகளையும் கொண்டுள்ளது. தண்ணீர் ஓடைகளுக்கான அடையாளங்கள் உள்ளன. பாறைகளில் அரிமானங்கள் காணப்படுகின்றன. மண் ஊட்டப் பொருட்கள் நிறைந்ததாக உள்ளது. துருவங்களில் தண்ணீர் உறைநிலையில் இருப்பதாக கருதப்படுகிறது. புவியைப் போன்றே அடர்ந்த வளிமண்டலம் காணப்படுகிறது

பிரச்சனை என்னவென்றால் மனிதனின் அத்தியாவசிய தேவையான பிராண வாயு தசம இலக்க அளவிலே காணப்படுகிறது.வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாய 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது(இது பூமியில். 03 தான்)

2020 ற்குள் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றங்களை ஏற்படுத்தப் போவதாக பல நாடுகளும் அறிவித்து விட்ட நிலையில் நமது நாடும் செவ்வாய் கிரக போட்டியில் பங்கு பெற்றுள்ளது. இராக்கெட் ஊர்திகள் மனிதனை சுமந்து செல்ல எந்நேரமும் தயாராக உள்ளன.

செவ்வாய் கிரகத்தை பொறுத்தவரை வேற்றுகிரக வாசிகள் (மார்ஷியன்ஸ்) பற்றிய பேச்சுக்கள் பிரபலம்.பச்சை நிறத்துடன் சங்கேத மொழியால் பேசிக்கொள்ளும் விசித்திர உயிரினங்களை பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். இந்த செய்தி /வதந்தி பற்றிய நம்பகத்தன்மை எந்த அளவிலானது என்பது நாம் அறியாதது.

நான்கு (அ) ஐந்து பரிமாணத்தில் வாழ்பவராக கூட இருக்கலாம். நம் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்ப அறிவைக் கொண்டிருக்கலாம். நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கூட அவர்கள் வழங்கியதாக இருக்கலாம். அறிவற்ற காட்டுவாசிகளாகவும் இருக்கலாம். மனிதர்களுடனான நட்பை புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லலாம் அல்லது பிரபஞ்ச யுத்தத்தையும் துவக்கி வைக்கலாம்

நம்மிடம் உள்ள மனித வளங்களை துரிதமாக சரியான பாதையில் பயன்படுத்தினால் அடுத்த தலைமுறை குழந்தைகள் கூட செவ்வாய் கிரகத்தில் மார்ஷியன்களுடன் கைகோர்த்து பள்ளி செல்லும் நிலைமை ஏற்படலாம்

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

0 comments:

Post a Comment